ஓபிஎஸ்-இபிஎஸ்.,க்கு அதிர்ச்சி கொடுத்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்! - Seithipunal
Seithipunal


திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், மயிலாடுதுறை, நாகை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் இருவரும் திமுகவில் இணைந்தனர்.

* மயிலாடுதுறை மாவட்டம், அதிமுகவை சேர்ந்த பூம்புகார் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஏ.சி.என்.விஜயபாலன், 
* சீர்காழி தொகுதி முன்னாள் எம்எல்ஏ து.மூர்த்தி உள்ளிட்ட மேலும் முக்கிய அதிமுக நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

* நாகை மாவட்ட ஜெயலலிதா துணை செயலாளரும், பரசலூர் ஊராட்சி மன்ற தலைவருமான செம்பை சண்முகம், 
* அம்மா பேரவை ஒன்றிய தலைவர் எம்.ரமேஷ், 
* செம்பனார்கோவில் செல்வராஜ், சுரேஷ்குமார், சரவணன் உள்ளிட்டவர்களின் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அன்பகம் கலை, டி.கே.எஸ்.இளங்கோவன், நிவேதா எம்.முருகன், பி.எம்.அன்பழகன், எம்.சுப்புராயன், பி.எம்.ஸ்ரீதர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK ex MLAs Joint to DMK 2022 nov


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->