அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தொடர்ந்த வழக்கு! நேரம் குறித்த டெல்லி உயர்நீதிமன்றம்!  - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச்செயலாளர் பதவியை எதிர்த்தும் உரிமையியல் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார்.

இதில் இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்க உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக வலிமையாக உருவெடுத்து வருகிறது.

அதே சமயத்தில் அதிமுகவின் பொதுக்குழு முடிவுகளை தேர்தல் ஆணையம் தற்பொழுது வரை ஏற்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அதிமுக பொதுக்குழு தொடர்பான எந்த முடிவும் எடுக்கவில்லை என ஏற்கனவே தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகலுடன் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளார். இதில் எந்த முடிவையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. 

இதற்கிடையே கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியிட, டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

இதுகுறித்த அவரின் மனுவில், அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து, இணையத்தில் பதிவிட உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்டுள்ள டெல்லி உயர்நீதிமன்றம், மதியம் 2 மணிக்கு விசாரணை செய்வதாக அறிவித்துள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Case Delhi HC 2pm


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->