அதிமுகவும் திமுகவும் தமிழ்நாட்டை நாசமாக்கிவிட்டார்கள்..அன்புமணி பேச்சு.!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி இந்தியாவில் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏ.பி முருகானந்தர் ஆதரித்து ஈரோடு மாவட்டம் பவானியில் பரப்பரை மேற்கொண்டார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

மக்கள் இடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் பேசுகையில், வேட்பாளர் முருகானந்தத்தை குறைந்தது 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும். அதிமுக, திமுகவிற்கு ஓட்டு போட்டது போதும். 57 ஆண்டுகளாக திமுக, அதிமுக தொடர்ந்து மாறி மாறி ஆட்சி செய்து தமிழ்நாட்டை நாசம் செய்து விட்டது. இதற்கெல்லாம் வரும் 2026 இல் முற்றுப்புள்ளி வைக்கவே இந்த கூட்டணியை அமைத்துள்ளோம். அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை. இனி நாம் நமக்காக வாக்களிப்போம் என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk dmk demaged tamilnadu anbumani speech


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->