9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. 63 வயது முதியவருக்கு சிறை தண்டனை.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கீழ மணக்காடு கிராமத்தை சேர்ந்த முதியவர் தங்கவேல் (வயது 63). இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

மேலும் இதனை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என சிறுமியை மிரட்டியதுடன், சத்தியம் செய்ய சொல்லி வற்புறுத்தியுள்ளார். ஆனால் அங்கிருந்து தப்பித்து ஓடிய சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து பேராவூரணி காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முடிவுவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முதியவர் தங்கவேலுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.12,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

63 years old man sexual Harrasment to 9 years old girl


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->