சரும பிரச்சனைக்கு நிரந்தர தீர்வளிக்கும் ''உருளைக்கிழங்கு''! - Seithipunal
Seithipunal


* சமையலுக்கு பயன்படுத்தும் உருளைக்கிழங்கு சரும பராமரிப்புக்கும் கூந்தல் பராமரிப்பிற்கும் வரண்ட சருமம், கருவளையம், கரும்புள்ளிகள், கண்களில் ஏற்படும் வீக்கம் போன்றவற்றை குணப்படுத்தும். 

* உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி குளிர் தண்ணீரில் ஊற வைத்து கருவளையம் உள்ள இடங்களில் 20 நிமிடம் வைத்துவிட்டு முகத்தை குளிர்ந்த தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் இரண்டு வாரத்தில் கருவளையம் நீங்கும். 

* வெயிலால் ஏற்படும் கருப்பை நீக்குவதற்கு உருளைக்கிழங்கை அரைத்து முகத்தில் மாஸ்போல் போட்டுக்கொள்ள வேண்டும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரால் கழுவினால் கருமையான சருமம் பொலிவுடன் காணப்படும். 

* அரைத்த உருளைக்கிழங்கு உடன் கற்றாழை ஜெல் சேர்த்து முகத்தில் போட பொலிவாக மாறும். தயிருடன் உருளைக்கிழங்கு அரைத்து சேர்த்து முகத்தில் தடவி வர சரும பளபளப்பாக மாறும். 

* கண்களில் ஏற்படும் வீக்கங்களை குணப்படுத்த உருளைக்கிழங்கை அரைத்து அதனுடன் சாறு ஆலிவ் ஆயில் போன்றவற்றை சேர்த்து முகத்தில் தடவலாம். 

* உருளைக்கிழங்கு சாறுடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ கரும்புள்ளிகள் நீங்கும்.

* சருமத்தில் ஏற்படும் அரிப்பு அல்லது எரிச்சல் பிரச்சனைக்கு உருளைக்கிழங்கு சாறுடன் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து நன்றாக கலந்து தடவி வர எரிச்சல் மற்றும் அரிப்பு பிரச்சனைகள் குணமடையும். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Potato skin problems permanent solution


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->