சப்பாத்திக்கு சூப்பரான பன்னீர் மட்டர் மசாலா.! வீட்டிலேயே பக்காவா செய்திடலாம் வாங்க.!  - Seithipunal
Seithipunal


வட இந்தியாவில் சப்பாத்தியுடன் சாப்பிட அடிக்கடி செய்யக்கூடிய பன்னீர் மட்டர் மசாலா எப்படி செய்வதென பார்க்கலாம்.

தேவையானவை : 

பட்டர் (பச்சை பட்டாணி) - 100 கிராம்
பன்னீர் - 200 கிராம்
பெரிய வெங்காயம்- 2
தக்காளி - 3
பூண்டு - 3 பல்
இஞ்சி - 3 சிறிய துண்டு
பட்டை, கிராம்பு
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
சீரகம் - அரை டீஸ்பூன்
தயிர் - 2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 5
கஸ்தூரி மேத்தி - 1/2 டீ ஸ்பூன்.
உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை:

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி முதலில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கி முந்திரி, இஞ்சி, பூண்டு  சேர்த்து நன்றாக வதக்கி, நறுக்கிய தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்கி தனியாக ஆறவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

அதே கடாயில் குறைந்த தீயில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை 1 சிறு துண்டு, கிராம்பு 1, சீரகம்,  மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

பிறகு அரைத்த விழுதை ஊற்றி மிளகாய் தூள், மல்லி தூள், சீரகத்தூள், கரம் மசாலா, தயிர் சேர்த்து மூடி வைத்து மிதமான தீயில் 3 நிமிடம் வேகவிடவும். 

பிறகு பட்டானி சேரத்து 5 நிமிடம் மூடி வைத்து வேகவிடவும் கடைசியாக பன்னீர் சேர்த்து 2 நிமிடம் வேக விட்டு கஸ்தூரி மேத்தி தூவி இறக்கினால் மட்டர் பன்னீர் ரெடி.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Panneer muttor masala preparation


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->