திருமண விருந்துகளில் பரிமாறும் அரைத்து விட்ட சாம்பார் சுவையாக செய்வது எப்படி?  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் : 

துவரம்பருப்பு - 150 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 2
கத்திரிக்காய் - 3 
முருங்கை காய் - 2
மாங்காய் -1 
பூண்டு - 4
காய்ந்த மிளகாய் - 5
சீரகம் - 1தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி - சிறிதளவு
நெய் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு

செய்முறை : 

கழுவி நறுக்கிய காய்கறிகளை   
தண்ணீர் ஊற்றி  1 தேக்கரண்டி மஞ்சள் தூள், சாம்பார் பொடி, சிறிதளவு  உப்பு சேர்த்து  தனியாக வேக விட வேண்டும்.

வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து அதில் துவரம்பருப்பு மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து பொறிய விட வேண்டும்.

அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து பச்சை மணம் போகும் வரை வதக்க வேண்டும். வதக்கிய பின் ஆற விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து காய்ந்த உடன் கடுகு, கருவேப்பிலை  போட்டு தாளிக்க வேண்டும். 

பின்னர் அதனுடன் வேக‌  வைத்த காய்கறி மற்றும் அரைத்த மசாலாவை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு 2 தேக்கரண்டி நெய் மற்றும் கொத்தமல்லி தூவி இறக்க சூப்பரான அரைத்து விட்ட சாம்பார் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Araithu Vaitha sambar Recipe In Tamil


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->