தாய்மார்கள் ஏன் மல்லிப்பூ பயன்படுத்த கூடாது.?!  - Seithipunal
Seithipunal


மல்லிகைப்பூ என்றாலே பெண்கள் சூடுவது மட்டும்தான் நினைவுக்கு வரும். அது அழகிற்காக மட்டுமல்ல பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது என அறிவீர்களா?

மல்லிகைப்பூவின் வாசனையில் மயங்காதவர்கள் யாருமில்லை. அதன் வாசம் மனதை அமைதிப்படுத்தும். இந்த பூவின் வாசனையைப் போலவே பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. 

மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள் :

சிலருக்கு வயிற்றில் கொக்கிப் புழு, நாடாப் புழு போன்றவைகள் உருவாகும். இதற்கு மல்லிகைப் பூக்கள் சிலவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி குடித்து வந்தால் போதும். குடற்புழுக்கள் தானாக வெளியேறிவிடும்.

மல்லிகைப் பூக்களை நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்து, காலை மாலை தேநீர் அருந்துவது போல் தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் போதும், சிறுநீரகக் கற்கள் காணாமல் போகும். 

பொதுவாக மாத விலக்கு காலங்களில் பெண்கள் சோர்வுடன் காணப்படுவார்கள். இனி கவலை வேண்டாம். சில மல்லிகைப் பூக்களை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி அருந்தினாலே போதும் மாத விலக்கு காலங்களில் சோர்வு நீங்கும்.

மல்லிகைப் பூ ஒன்றிரண்டு தினமும் உட்கொண்டால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

தாய்ப்பால் நிறுத்தவும், அதனால் உண்டாகும் வலியையும் வீக்கத்தினையும் குறைக்க, மல்லிக்கைப்பூ செண்டை மார்பில் சுற்றி இரவு முழுவதும் வைத்தால், தாய்ப்பால் சுரப்பது நின்று போகும். இதனால் தான் மல்லிகைப்பூவை தாய்மார்கள் அறவே தொடக்கூடாது என்று கூறுவார்கள்.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why should mothers not use jasmine


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->