கொரோனாவை வந்த வழியே ஓடவிட மிக சிறந்த மருந்து! சித்த மருத்துவர்கள் பரிந்துரை!!
Siddha medicine for Corona virus
சீனாவின் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பரவிவரும் கரோனா வைரஸ்க்கு அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், சளி மூச்சு விட சிரமம் போன்ற பிரச்சினைகளுக்கு தற்போது கபசுர குடிநீரை சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
இந்த கபசுர பொடி வைரஸை நெருங்கவிடாமல் தடுக்கும் விதமாக இதில் திப்பிலி, லவங்கம், ஆடாதொடை இலை, சீந்தில், சிறுதேக்கு, நிலவேம்பு, கோரைக்கிழங்கு, கடுக்காய், கற்பூரவல்லி இலை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மூலிகைகளை சேர்த்து பொடியாக்கி கபசுர பொடி தயாரிக்கப்படுகிறது.
இதனை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் கரோனா அறிகுறிகளாக இருக்கும் இரும்பல், சளி, சிரமமின்றி மூச்சு விடுதல் போன்றவைக்கு கைகொடுத்து உதவும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பொடி மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய வைரஸ்களை உடலில் அண்டவிடாமல் தடுத்து நிறுத்தும் என்று சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அதே சமயத்தில் கபசுரக் குடிநீர் மட்டும் தான் கொரோனா வைரஸை அழிக்க கூடிய மருந்து என்று யாரும் எண்ண கூடாது. இது மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று தான் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் அனைவரும் இந்த கபசுர குடிநீரை பருகுவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
English Summary
Siddha medicine for Corona virus