ராகியில் முருங்கை அடை - இதோ உங்களுக்காக.!
recipie of ragi adai
ராகியில் முருங்கை அடை - இதோ உங்களுக்காக.!
கேழ்வரகு வைத்து களி, புட்டு, சேமியா என்று பல வகையான உணவு செய்யலாம். குறிப்பாக சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் இதனை எடுத்துக் கொள்வதால் உடலில் இருக்கின்ற சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
மேலும் இதில் கால்சியம் இருப்பதால், எலும்பு மற்றும் பற்களுக்கு மிகவும் நல்லது. இப்படி பல மருத்துவ குணம் கொண்ட இந்த ராகியை வைத்து முருகை அடை செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருள்:-
ராகி, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, முருங்கை கீரை, சீரகம், உப்பு.
செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் ராகி மாவை எடுத்துகொண்டு அதில் நறுக்கி வைத்த பெரிய வெங்காயம், பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,முருங்கை கீரை,சீரகம்,உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடை பதத்திற்கு பிசைந்து சிறு சிறு உருண்டையாக பிடித்துக்கொள்ளுங்கள்.
பின்னர் வாழை இலை ஒன்றை எடுத்து அதில் எண்ணெய் தடவி ராகி உருண்டையை எடுத்து சரிசமமாக தட்டி தோசைக்கல்லில் போடவும். இப்போது சுவையான முருங்கை கீரை ராகி அடை ரெடி. இதை வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும்.
தேங்காய் சட்னி எப்போதும் அடைக்கு சிறப்பான பொருத்தமாக இருக்கும். இல்லாவிட்டால் தக்காளி சட்னி, சாம்பார் கூட வைத்து சாப்பிடலாம். சின்ன குழந்தைகளுக்கு நாட்டுச்சர்க்கரையுடன் கூட பரிமாறலாம்.