பார்லர் போகாமல் வீட்டிலேயே இயற்கையாக முகத்தை எப்படி ப்ளீச் செய்வது?
Natural Bleaching Method
பள்ளி கல்லூரி மாணவர்கள் முதல் பேரிளம் பெண்கள் வரை தங்கள் சரும அழகை பாதுகாக்க வேண்டும் என விரும்புவார்கள். அதற்காக பார்லர், அழகு சாதன பொருட்கள் என அவர்கள் செய்யும் வழிமுறைகள் ஏராளம். விட்டில் உள்ள பொருட்களை வைத்தே ஈசியாக முகத்தை எப்படி ப்ளீச் செய்வது என தெரிந்து கொள்ளவும்.
புளியில் ரசாயண பீளிசிங்க் பொருட்களுக்கான இயற்கையான மாற்று பொருள் உள்ளது. இதனால், அதில் ப்ளீச்சிங்க செய்யதால் சிறந்த பலனை அளிக்கும். புளியில் எப்படி ப்ளீச்சிங்க் செய்வது என தெரிந்து கொள்வோம்.
தேவையானவை:புளி - ஒரு எலுமிச்சை அளவு மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி அரிசி மாவு - 1 தேக்கரண்டி தேன் - 1 தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி ரோஜா பன்னீர், தண்ணீர் - தேவையான அளவு
புளியை கெட்டியாக கரைத்து கொள்ளுங்கள். அதில், அரிசி மாவு, மஞ்சள் தூள், எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தேன் கலந்து 10 நிமிடங்கள் ஊறவிடுங்கள். அதன் பின் முகத்தை பன்னீர் கொண்டு துடைத்து விட்டு கலவையை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி வர முகம் பளிச்சென மாறும்.
ஆரஞ்ச் தோல்:
ஆரஞ்சில் வைட்டமின் சி உள்ளது. இது இயற்கையாக சருமத்திற்கு தேவையான பொலிவையும் மினுமினுப்பையும் கொடுக்கின்றது . அதனை எப்படி முகத்திற்கு பயன்படுத்தலாம் என தெரிந்து கொள்வோம்.
ஆரஞ்சு தோல் பொடி - 2 தேக்கரண்டி வால்நட் பொடி - 1 தேக்கரண்டி சந்தனத் தூள் - 1 தேக்கரண்டி வெள்ளரிச் சாறு - 5 தேக்கரண்டி
ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சு தோல் பொடி, வால்நட் பொடி, சந்தனத் தூள் மற்றும் வெள்ளரிச் சாறு அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளலாம். இதனை 10 நிமிடங்கள் கழித்து முகத்தை வெள்ளரி சாறுகொண்டி துடைத்து விட்ட பின் இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி வர முகம் பொலிவு பெறும்.