வீட்டில் ராகி இருக்கா? அப்போ இதை செய்து பாருங்க.!! - Seithipunal
Seithipunal


வீட்டில் ராகி இருக்கா? அப்போ இதை செய்து பாருங்க.!!

திணை வகைகளில் ஒன்றான கேழ்வரகு பல ஆரோக்கியத்தை தரும். இந்த கேழ்வரகு மாவை வைத்து சப்பாத்தி, தோசை என்றுதான் செய்யலாம். ஆனால், புதிதாக இந்த கேழ்வரகை வைத்து உப்மா செய்வது எப்படி? என்று இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்

கேழ்வரகு மாவு 
கடுகு
சீரகம்
எண்ணெய் 
கடலைப்பருப்பு 
மஞ்சள் தூள்
கடலைப்பருப்பு
பச்சை மிளகாய் 
வெங்காயம், தக்காளி
கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு 
தண்ணீர் - 2 கப்

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கேழ்வரகு மாவு சேர்த்து வாசனை வரும் வரை வதக்கி எடுத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில், எண்ணெயை ஊற்றி, கடுகு, சீரகம், கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கி கறிவேப்பிலை, வெங்காயம் பச்சைமிளகாய், கொத்தமல்லி  சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து சிறிது உப்பு தூவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் கொத்தி வந்தவுடன் மெதுவாக கேழ்வரகு மாவை சேர்த்து மூடி குறைந்த தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும். தண்ணீர் முழுவதுமாக வற்றியதும் அதில் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான கேழ்வரகு உப்மா தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make ragi upma


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->