நண்பர்களுடன் பார்ட்டி செய்த வாலிபர் - நொடியில் நேர்ந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் மகன் தீபென்ஷா சர்மா. இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொருள் வல்லுநராக பணிபுரிந்து வருகிறார். 

இந்த நிலையில், இவர் நேற்று இரவு பெங்களூர் அடுத்த கொடிகேஹல்லி அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு பெண் தோழிகள் மற்றும் ஆண் நண்பருடன் இணைந்து பார்ட்டி செய்துள்ளார். அப்போது, அவர் போதை தலைக்கேறிய நிலையில் முப்பத்து மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இதைப்பார்த்த பொதுமக்கள் கே.ஆர்.புரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் திபென்ஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து திபென்ஷா தவறி விழுந்தாரா? அல்லது தள்ளிவிடப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth died for drowned floor in banglore


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->