பக்கத்து வீட்டில் காரை நிறுத்திய கவுன்சிலர்.. வாக்குவாதத்தில் இளைஞர் துணிகரம்..!
youth chapped Counselor fingers in hariyana
கவுன்சிலரின் கைவிரலை வெட்டிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஹரியாணா மாநிலம் கர்னல் நகரின் 13 வது வார்டில் கவுன்சிலராக இருப்பவர் இஹ் குலாட்டி. இவர் பக்கத்து வீட்டு வாசலில் அவரது காரை நிறுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வீட்டில் உள்ளவர்கள் பலமுறை கூறியும் அவர் காரை அங்கே நிறுத்தி வருகிறார்.
இந்நிலையில், அந்த வீட்டில் உள்ள ஜிதேந்திர குமார் என்ற இளைஞர் சில நாட்களுக்கு முன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரின் பெற்றோர் கவுன்சிலர் வீட்டு வாசலில் கார் நிறுத்தியதை குறித்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், காலை வழக்கம் போல அவர்களின் வீட்டு வாசலில் கவுன்சில் இஷ் குலாட்டி காரை நிறுத்தியிருக்கிறார்.
அப்போது அங்கு வந்த ஜிதேந்திர குமார், கவுன்சிலரிடம் கார் நிறுத்தாதே என கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டத. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஜிதேந்திர குமார், கத்தியை எடுத்து வந்து கவுன்சிலர் இஷ் குலாட்டியை கைவிரல்களை வெட்டியுள்ளார்.
அவரை மீட்ட அக்கம்பக்கதினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்தனர்.
English Summary
youth chapped Counselor fingers in hariyana