ஒருபக்கம் பசியால் போராடும் நிலை.. மறுபக்கம் இலவச ரேஷன்- யோகி ஆதித்யநாத் தாக்கு.! - Seithipunal
Seithipunal


மேற்கு உத்தரப்பிரதேசம், அம்ரோஹாவில் தேர்தல் பேரணியில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார். மக்களவைத் தேர்தலில் ஆம்ரோஹா தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

அப்போது பேசிய யோகி, அண்டை நாட்டில் உள்ளவர்கள் பசியுடன் போராடும் பொழுது இந்தியாவில் 80 கோடி மக்கள் இலவச ரேசன் பெறுகின்றனர். 

23-24 கோடி மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தான் 1947 ஆம் ஆண்டு பிரிவினைக்கு பிறகு உருவானது. அதனால் இன்று பட்டினியால் வாடுகிறது. 

பா.ஜ.க தனது மக்களவைத் தேர்தல் அறிக்கையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டில் 80 கோடிக்கும் அதிகமான பொது மக்களுக்கு இலவச ரேஷன் வழங்குவதாக தெரிவித்துள்ளது. 

ஒரு பக்கம் பாகிஸ்தானில் மக்கள் பசியால் வாடுகின்றனர். ஒவ்வொரு திசையில் இருந்தும் ஒரே ஒரு முழக்கம் மட்டும் தான் கேட்கிறது. அதுதான் ''மீண்டும் மோடி அரசு என்று'' என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yogi Adityanath speech


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->