யோகி ஆதித்யநாத்தின் அயோத்தி பயணம் திடீர் ஒத்திவைப்பு: காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாதனை அயோத்தி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

டெல்லி, உத்தர பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி சனிக்கிழமை கோவில் நகருக்கு வருவதை முன்னிட்டு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று அயோத்திக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். 

லக்னோவில் கடுமையான பனிமூட்டம் காரணமாக ஆதித்யநாத்தின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நாளை முதல்வர் யோகி அயோத்திக்குச் சென்று அங்கு நடைபெற்று வரும் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளார். 

வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோயிலில் பிரம்மாண்டமாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yogi Adityanath Ayodhya trip postponed


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->