அண்ணன் மீது பகை.. தங்கையை கெடுத்து.. ஆண்மையை நிரூபித்த கேவல பிறவிகள்.!
women raped by 3 who opposed to her brother
உத்தரப்பிரதேச மாநிலம் கிராமப்புற பகுதியில் 19 வயது இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த பெண்ணின் சகோதரருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தீப் என்ற கொடூரனுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
எனவே, இரு தரப்பினரும் அவ்வப்போது முட்டி மோதிக்கொள்ளும் நிலை ஏற்படுவது வழக்கம். அத்துடன், பழிதீர்க்க இரண்டு தரப்பினரும் திட்டம்போட்டு காத்து இருந்துள்ளனர்.
இத்தகைய நிலையில், கடந்த 14ஆம் தேதியன்று 19 வயது பெண் அவருடைய வீட்டிற்கு அருகே இருக்கும் மாட்டுக்கொட்டகையில் இருக்கும் மாடுகளுக்கு தீவனம் வைத்து கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அங்கே ஏற்கனவே ஒளிந்து கொண்டிருந்த சந்தீப் மற்றும் அவருடைய நண்பர்கள் 3 பேர் பெண்ணை விரட்டி பிடித்து அங்கேயே வைத்து மாறி மாறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தற்போது அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்து, இருவரை தேடி வருகின்றனர்.
English Summary
women raped by 3 who opposed to her brother