ரகசிய திருமணம்.. ரகசிய உல்லாசம்.. விவசாய நிலத்தில் பிணமாக கிடந்த இளம்பெண்.! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் ஹாரிகா என்ற பெண் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் ஸ்ரீனிவாசலு என்ற நபரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திப்பது வழக்கம். 

இத்தகைய சூழலில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். ஆனால், பெற்றோர் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். 

திருமணம் செய்து அவர்களது வீட்டில் தனித்தனியே வசித்து வந்தனர். இத்தகைய சூழலில், நேற்று முன்தினம் தான் பைக் ஓட்ட பழகுவதாக கூறிவிட்டு ஹாரிகா வெளியில் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத காரணத்தால், பெற்றோர் பல இடங்களில் தேடி அலைந்தனர். 

காவல் நிலையத்திலும் தகவல் கொடுத்த நிலையில், அவர் அருகில் உள்ள விவசாய நிலத்தில் சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். ஹாரிகா தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்துவிட்டாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women death in form


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->