புல்லட் வாங்கி வராத மனைவி., நண்பர்களுடன் சேர்ந்து வேட்டையாடிய கணவன்.! வீடியோ எடுத்து மிரட்டல்.!
women abused by husband's friends in delhi
டெல்லி அருகே பைரியா என்னும் இடத்தில் வாலிபர் இஸ்லாமிய முறைப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த பெண் வரதட்சணையாக புல்லட் வாங்கி வராததால் நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்து இருக்கின்றார்.
டெல்லியில் 2016ம் ஆண்டு அவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. அந்த பெண் ஒரு ஆட்டோ ஓட்டுபவரின் மகள். மூன்றாண்டுகளாக தொடர்ந்து அவர் வரதட்சணை கேட்டு நச்சரித்து இருக்கின்றார். அதுவும் ஒரு புல்லட் கட்டாயம் வேண்டுமென கேட்டுக்கொண்டே இருந்துள்ளார். இதற்குள் ஒரு குழந்தையும் அவர்களுக்கு பிறந்துள்ளது.
2017ம் ஆண்டில் அந்த கொடூரன் கேட்ட புல்லட் கிடைக்காத காரணத்தால் தனது மனைவியை நான்கு நண்பர்களுடன் சேர்ந்து அந்த கொடூரன் பலாத்காரம் செய்து இருக்கின்றான்.
அத்துடன் அதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, புல்லட் வாங்கி வராவில்லை என்றால் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அசிங்க படுத்தி விடுவேன் என்று மிரட்டி இருக்கின்றார். இதன் காரணமாக அந்த பெண் அவரிடம் இருந்து தப்பித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அந்த கயவனை கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
English Summary
women abused by husband's friends in delhi