பெண்ணை வீட்டு வேலை செய்ய சொல்லுவது கொடுமை ஆகாது - உயர்நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


மும்பை உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளையில் பெண் ஒருவர் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக மனு ஒன்று தாக்கல் செய்தார். இந்நிலையில் குடும்ப வன்முறை வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த மனுவை நீதிபதிகள் விபா கன்கான்வாடி, ராஜேஷ் பாட்டீல் உள்ளிட்டோர் விசாரணை செய்தனர். 

அந்த மனுவில் அந்த பெண் தெரிவித்துள்ளதாவது, "திருமணமான ஒரு மாதத்தில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை வீட்டு வேலைக்காரி போல நடத்தியதாகவும், புதிய கார் வாங்க கணவர் குடும்பத்தினர் ரூ.4 லட்சம் கேட்டு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் "திருமணமான பெண்ணை வீட்டு வேலை செய்ய சொல்வது கண்டிப்பாக குடும்ப தேவைக்காகத்தான் இருக்கும். அதற்காக அதனை வேலைக்காரர்கள் செய்வது போன்ற வேலை என்று கூறமுடியாது. பெண்ணுக்கு வீட்டு வேலை செய்ய விருப்பமில்லை என்றால் திருமணத்துக்கு முன்பே அதுகுறித்து மாப்பிள்ளை வீட்டாரிடம் தெரிவித்திருந்தால், பெண்ணை திருமணம் செய்வது பற்றி யோசனை செய்திருப்பார்கள். 

எனவே வீட்டு வேலை செய்ய சொல்வது திருமணமான பெண்ணை கொடுமைபடுத்துவது ஆகாது. இதேபோன்று சாதாரணமாக துன்புறுத்தப்பட்டதாக மட்டும் புகாரில் தெரிவித்துள்ளார். எவ்வாறு துன்புறுத்தப்பட்டார் என்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை. இதனால் பெண்ணின் மற்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் குடும்ப வன்முறை சட்டப்பிரிவில் வராது" என்று கூறி பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி உத்தரவிட்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

womans house work not harassment high court order


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->