ஆட்டோ ஓட்டுநர் மீது பாலியல் புகார் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் தனது ஆண் நண்பரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தான் ஆட்டோவில் கடற்கரைக்கு செல்லும்போது, ஆட்டோ ஓட்டுநர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவரது ஆட்டோவில் ஏறி பயணிக்கும்போதே தான் மயங்கிவிட்டதாகவும், எழுந்து பார்த்தபோது அரை நிர்வாணமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு, அதிர்ந்து போன பெண்ணின் நண்பர், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வற்புறுத்திய பிறகு அந்த இளம்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய போலீசார் 58 வயது ஆட்டோ ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர் தான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் உடனடியாக பெண் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தியதில் ஆட்டோ ஓட்டுநர் நிரபராதி என்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அந்தப் பெண் தனது ஆண் நண்பர் தன்னை விட்டுச் செல்லாமல், எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற ஆசையில் இவ்வாறு பொய் கூறியதாக தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த போலீஸ் அதிகாரிகள் பெண்ணைக் கண்டித்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman pettition against auto driver in kerala


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->