ம.பியில் சோகம் - கேஸ் சிலிண்டர் வெடித்து - ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்.!
woman died and three peoples injured for gas blast in madhya pradesh
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பூஃப் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் ஜோஷி. இவரது வீட்டில் சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் குளிர்சாதனப் பெட்டியின் கம்ப்ரசர் உள்ளிட்டவை அடுத்தடுத்து வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
அப்போது, வீட்டில் மனோஜ் ஜோஷியின் தாயார் கமலா தேவி, மருமகள் ரஞ்சனா மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளிட்டோர் இருந்துள்ளனர். இவர்களில் கமலா தேவி உயிரிழந்த நிலையில், ரஞ்சனா மற்றும் இரண்டு குழந்தைகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக குவாலியர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில், முதற்கட்ட விசாரணையில், வீட்டில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்ட போது பூஜை அறையில் இருந்த விளக்கு எரிந்துகொண்டிருந்ததால் தீப்பற்றி விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
English Summary
woman died and three peoples injured for gas blast in madhya pradesh