செல்போன் பிசியாக வந்ததைக் கேட்ட கணவர் - ஆத்திரத்தில் மனைவி செய்த விபரீதத் செயல்.! - Seithipunal
Seithipunal


செல்போன் பிசியாக வந்ததைக் கேட்ட கணவர் - ஆத்திரத்தில் மனைவி செய்த விபரீதத் செயல்.!

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டம் வரந்தரபள்ளிப் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். கூலித் தொழிலாளியான இவரது மனைவி நிஷா. இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். சமீப காலமாகவே நிஷாவின் நடத்தை மீது, வினோத்துக்கு சந்தேகம் இருந்து வந்தது.

இந்த நிலையில் மனைவி நிஷாவுக்கு, வினோத் போன் செய்தபோது நீண்டநேரம் அவரது செல்போன் பிஸி, பிஸி என்றே வந்துள்ளது. இதுகுறித்து வினோத் தன் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த நிஷா, வினோத்தின் நெஞ்சில் கத்தியால் குத்தியுள்ளார். 

இதனால், வினோத் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து பயந்து போன நிஷா, வினோத்தை மருத்துவமனையில் கீழே விழுந்துவிட்டதாக சொல்லி சேர்த்துள்ளார். ஆனால், வினோத் சிகிச்சைப் பலன் இன்றி பரிதாபமாக  உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், சம்பவம் குறித்து வினோத் மனைவி நிஷாவிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் கணவனைக் கத்தியால் குத்தியதை ஒப்புக்கொண்டார். 

இதையடுத்து போலீசார் நிஷாவை கைது செய்து, அவர் பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman arrested for kill husband in kerala


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->