மேற்கு வங்காள ஆளுநர் மீது தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார்! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநிலத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 

மேற்குவங்க ஆளுநராக ஆனந்த் போஸ் உள்ளார். பல்கலைக்கழக துணை வேந்தர் நியமிப்பது உள்பட பல்வேறு விவரங்களில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. 

இந்நிலையில் மாநிலத்தில் நடக்க இருக்கும் மக்களவை  தேர்தலில் ஆளுநர் தலையிடுவது தொடர்பாக அவர் மீது தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. 

இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர், 2024 மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து தலையிட்டு வருவது குறித்தும் வாக்குப்பதிவு நாளில் தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்ல முயற்சிப்பது தொடர்பாகவும் ஆளுநர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Bengal Governor against complaint 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->