வில்லியனூர் அருகே போலீசாரை தாக்கிய மது பிரியர்கள்.!  - Seithipunal
Seithipunal


வில்லியனூர் அருகே காவல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது, மது போதையில் இருந்த 2 வாலிபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

புதுச்சேரி : வில்லியனூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர்கள் யுவராஜ் மற்றும் பிரபாகரன். இவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணியளவில் கோட்டைமேடு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அங்கு உள்ள மடுக்கடியில் மது அருந்திவிட்டு இரண்டு பேர், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபாசமான வார்த்தைகளால் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.

இதனை பார்த்த போலீசார் யுவராஜ் மற்றும் பிரபாகரன் அவர்களை கண்டித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு செல்லும்படி அறிவுரை வழங்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த மது போதையில் இருந்த இரண்டு வாலிபர்களும் போலீசாரை திட்டி உள்ளனர்.

இதனையடுத்து போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது, மதுபோதையில் இருந்த இரண்டு வாலிபர்களும் போலீஸாரின் சட்டையை பிடித்து கீழே தள்ளியுள்ளனர். மேலும் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு விசாரணை செய்தபோது, அவர்கள் கண்டமங்கலம் அடுத்துள்ள சடையாண்டி குப்பம் ஸ்ரீதர் (வயது 35), ஜெயக்குமார் (வயது 34) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் இருவர் மீதும் போலீசாரை பணி செய்ய விடாமல் தாக்க முயன்றது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VILIYANUR POLICE ATTACK


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->