இரட்டை குழந்தைகளுக்கு இதுவரை இல்லாத வித்தியாசமான பெயர்.. அசத்திய தம்பதிகள்.!!
Uttarpradesh twin child name Sanitizer and Quarantine
கரோனா வைரஸின் தாக்கம் காரணமாக உலகளவில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. தினமும் மக்கள் தொடர்ந்து பலியாகும் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. உலக நாடுகள் முழுவதும் கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் பிறக்கும் சில குழந்தைகளுக்காக பெற்றோர்கள் விருப்பப்பட்டு கொரோனா, கோவிட், ஊரடங்கு என்று வித விதமான பெயர்களை சூட்டி வருகின்றனர். இதனைப்போன்ற சுவாரசிய சம்பவம் மீண்டும் நடைபெற்றுள்ளது.
இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட்டில் கர்ப்பிணி பெண் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். கரோனா காலகட்டத்தில் இணைபிரியாத வகையில் இருக்கும் தனிமைப்படுத்தல் மற்றும் கிருமிநாசினியின் நினைவாக குழந்தைகளுக்கு குவாரன்டைன் மற்றும் சானிடைசர் என்று பெயரை சூட்டியுள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக குழந்தையின் தாய் மற்றும் தந்தை கூறுகையில், " குவாரன்டைன் மற்றும் சானிடைசர் கொரோனா வைரசுக்கு எதிராக மனிதர்களுக்கு பாதுகாப்பு தரும் விஷயமாகும். இதனால் எங்களது குழந்தைகளுக்கு இதனையே பெயராக வைக்க முடிவு செய்து, இதனை சூட்டியுள்ளோம். இருவரும் ஆண் இரட்டை குழந்தைகள் என்பதால் எங்களுக்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Uttarpradesh twin child name Sanitizer and Quarantine