நண்பரின் தாலியை வெட்டி.. செல்பி எடுத்த கொடூரம்.. தனியாக இருந்த இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்.!  - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முஹர் பகுதியில் கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி காவல் நிலையத்தில் 55 வயதான மூதாட்டி ஒரு புகார் கொடுத்தார். 

அந்த புகாரில், "டிசம்பர் ஒன்றாம் தேதி என்னுடைய குடும்பத்தினர் வயல் வேலைக்கு சென்றோம். அப்போது என் மகன் கணு முந்தா( 24 வயது) மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நாங்கள் வயல் வேலை முடித்து வீட்டிற்கு திரும்பிய போது அவரை கடத்திச் சென்று விட்டதாக அக்கம் பக்கத்தினர் கூறினார்கள். 

நாங்கள் எங்கு தேடியும் கணு கிடைக்கவில்லை." என்று தெரிவித்து இருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சாகர் முந்தா என்ற நபரை கைது செய்தனர். 

காணாமல் போன இளைஞரின் உடல் காட்டு பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அவருடைய தலையை போலீசார் கண்டறிந்தனர். அத்துடன் கொலை செய்தவர்கள் இளைஞரை வெட்டி அவரது தலையுடன் செல்பி எடுத்து கொண்டாடி இருக்கின்றனர் என்பது போலீசார் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் நேரடியாக ஈடுபட்ட சாகர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி உள்ளிட்ட இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இரு குடும்பத்திற்கும் நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக தான் அவரை கொலை செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

uttarkant friend murdered by relative


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->