மருத்துவரை சுட்டுக் கொலை செய்த மர்ம ஆசாமிகள்! போலீசார் வலைவீச்சு!
UP doctor killed Police investigation
உத்திர பிரதேசம், ஜான்பூரில் மருத்துவர் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜான்பூர் பகுதியில் ஆயுர்வேத மருத்துவராக இருந்தவர் திலத்தாரி சிங் படேல் (வயது 35). படேல் அவசர கால நோயாளிகள் அவரை அணுகுவதற்கு வசதியாக தனது வீட்டின் கதவை இரவு நேரங்களில் எப்போதும் திறந்து வைத்திருப்பார்.
இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் மருத்துவரை சுட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மருத்துவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கடந்த 8 ஆண்டுகளாக வாடகை வீட்டில் கிளினிக் நடத்தி வந்த மருத்துவரின் கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிப்பதற்காக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
UP doctor killed Police investigation