உளவுத்துறை உச்சகட்ட எச்சரிக்கை.. தமிழகம், கேரளா, கர்நாடகத்தில் மாபெரும் தாக்குதல்..!!
UN warn about ISIS terrorist attack In Tamilnadu, Kerala, Karnataka States
கேரள, கர்நாடக மாநிலங்களில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாகவும், இந்தியா, பாக்கிஸ்தான், வங்கதேசம் மற்றும் மியான்மர் பகுதிகளில் 150 முதல் 200 அல் கொய்தா பயங்கரவாதிகள் உள்ளூர் பயங்கரவாதிகளுடன் சேர்ந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், ஐ.எஸ், அல்-கொய்தா தொடர்பான தீவிரவாத கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள 26 ஆவது அறிக்கையின் படி, அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு இந்திய துணை கண்டத்தில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் நிம்ர்ஸ், ஹெல்மாண்ட், கந்தகார் பகுதியில் செயல்பட்டு வருகிறது.
வங்கதேசம், இந்தியா, மியான்மர், பாகிஸ்தான் நாடுகளில் 150 பயங்கரவாதிகள் முதல் 200 பயனராவதிகள் வரை இருக்கின்றனர். இவர்கள் கர்நாடகா, தமிழகம், கேரள மாநிலங்களில் இருக்கும் தங்களின் கூட்டாளிகளுடன் சேர்ந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும், இந்த தாக்குதல் பெரிய அளவில் நடத்தப்படலாம் என்பதால் தகுந்த முன்னெச்சரியுடன் செயல்படுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
UN warn about ISIS terrorist attack In Tamilnadu, Kerala, Karnataka States