பீகார் : பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய சொல்லி மாணவர்களைத் தாக்கிய ஆசிரியர்கள்.! வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


பீகார் : பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய சொல்லி மாணவர்களைத் தாக்கிய ஆசிரியர்கள்.! வைரலாகும் வீடியோ.!

பீகார் மாநிலத்தில் உள்ள ஜமுய் மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் இரண்டு மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர் கொடூரமாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. 

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ஒரு மாணவனின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் படி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இது தொடர்பாக மாணவனின் தாய் தெரிவித்ததாவது, "கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் தனது மகனையும் உறவினரின் மகனையும் பள்ளியில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பில் சேர்த்துவிட்டேன். அன்றே அவர்கள் பள்ளி விடுதியிலும் சேர்க்கப்பட்டனர். 

இந்த நிலையில் நாங்கள் கடந்த சனிக்கிழமை சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோவில் இரண்டு ஆசிரியர்கள் எங்கள் குழந்தைகளை கொடூரமாக தாக்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம்.

உடனே நாங்கள் பள்ளிக்குச் சென்று பார்த்தபோது, சிறுவர்களின் உடல் முழுவதும் காயங்கள் இருந்தது" என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதில், "கழிவறையை சுத்தம் செய்யவும், பள்ளி வளாகத்தை துடைக்கவும் பள்ளி நிர்வாகம் வற்புறுத்தி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two school students addmitted hospital for teachers attack in bihar


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->