வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு - போலீசாரின் வலைவீச்சில் சிகிய வாலிபர்கள்.! - Seithipunal
Seithipunal


பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்கும் வகையில் நாடு முழுவதும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டு பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதே சமயம் இந்த ரெயில்கள் மீது தாக்குதல் சம்பவமும் அரங்கேறி வருகிறது.

அந்த வகையில், ரூர்கேலாவில் இருந்து புவனேஸ்வர் நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் மேராமண்டலி மற்றும் புதாபங்க் நகருக்கு இடைப்பட்ட பகுதியில் சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் சிலர் ரெயில் மீது கற்களை வீசியுள்ளனர்.

இதில், ரெயிலின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. இந்த சம்பவம் தொடர்பாக பணியில் இருந்த ரெயில்வே போலீசார் உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

அதன் படி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரெயில் மீது கல்வீசிய சம்பவத்தில் 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில், மதுபோதையில், விளையாட்டுக்காக ரெயில் மீது கல்வீசியது தெரிய வந்தது. அதன்பிறகு போலீசார் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples arrested for attack vande bharat train


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->