ஆண்களுக்கு மட்டுமே குவாட்டரும் கோழியும்! பெண்களுக்கு குவாட்டர் வழங்கவில்லை! - Seithipunal
Seithipunal


புதிய தேசிய கட்சி அறிவிப்பை கொண்டாடும் கட்சி நிர்வாகிகள்!

தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக சந்திரசேகர ராவ் உள்ளார்.இவர் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி என்ற கட்சியை நடத்தி வருகிறார். 2024ம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்ற லோக்சபா தேர்தலில் பா.ஜகவை எதிர்க்க தேசிய அளவில் கூட்டணியை உருவாக்க திட்டமிட்ட சந்திரசேகர ராவ் சில மாதங்களுக்கு முன் பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் , சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே என பல்வேறு எதிர்கட்சி தலைவர்களை சந்தித்தார். சென்னைகக்கும் அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க வந்து சென்றார் என பேசப்படுகிறது. 

இந்நிலையில் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தேசிய கட்சி துவங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நாளை தசாரா பண்டிகையை முன்னிட்டு புதிய தேசிய கட்சி குறித்த அறிவிப்பை சந்திரசேகரரராவ் வெளியிடுவார் என செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில் சந்திரசேகர ராவ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான ராஜனாலா ஸ்ரீஹரி மக்களுக்கு கோழியும் மதுவும் கொடுத்து கொண்டாடிய உள்ளார். இருப்பினும் பெண்களுக்கு மது வழங்காமல் கோழி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் நின்ற தொழிலாளர்களும் பொதுமக்களும் மதுவையும் கோழியையும் வாங்கிச் சென்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TRS senior leader Rajanala Srihari celebrating by giving people chicken and wine


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->