திடீரென பற்றியெரிந்த ரயில்: போலீசார் தீவிர விசாரணை.!
Train caught fire Police investigation
மராட்டிய மாநிலம், பட்லபூர் பகுதியில் உள்ள ரயில்வே பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ரயிலில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தால் ரயிலின் ஒரு பெட்டி முழுவதும் எரிந்து நாசமாகியது. இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்து காரணமாக யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
English Summary
Train caught fire Police investigation