கொரோனா தொற்று அதிகரிப்பு! அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் நாளை பிரதமர் மோடி ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் பிரதமர் மோடி நாளை அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

கடந்த சில நாட்களாக சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அம்மாநிலங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்து நாளை பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுட ன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை‌ நடைப்பெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomorrow pm modi video conference with all state chief minister


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->