திருப்பதி ஏழுமலையான் : மார்ச் மாதம் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட் நாளை வெளியீடு.! - Seithipunal
Seithipunal


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதம் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட் நாளை வெளியிடப்படவுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் ரூ.300 தரிசன கட்டண சீட்டு மற்றும் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான இலவச டிக்கெட் மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

இந்த நிலையில், மார்ச் மாதத்திற்கான அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான இலவச டிக்கெட் நாளை தேவஸ்தான இணையதள பக்கத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதலில் பதிவு செய்யும் பக்தர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupati Eyumalayan Tickets for Anga Pradhaksan in March released tomorrow


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->