உ.பியில் காதலியை பார்க்க வந்த காதலனுக்கு நேர்ந்த கொடூரம் - நடந்தது என்ன?
three peoples kill youth for came to see girl friend in uttar pradesh
உ.பியில் காதலியை பார்க்க வந்த காதலனுக்கு நேர்ந்த கொடூரம் - நடந்தது என்ன?
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் கோடா பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் வேறொரு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி வீட்டுக்கு தெரியாமல் செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்துக் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், சிறுமியின் வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த காதலன் தனது காதலியை பார்ப்பதற்காக வந்துள்ளார். அபோது திடீரென சிறுமியின் தந்தை வரவே, அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடி உள்ளார். இதை பார்த்த சிறுமியின் தந்தை வீட்டிற்கு திருடன் தான் வந்துவிட்டாரோ என்று எண்ணி அந்த இளைஞரை பிடிக்க முயன்றனர்.
அதன் பின்னர் அந்த இளைஞர் பெண்ணின் காதலன் என்று தெரிந்ததும் அங்கிருந்தவர்கள் அந்த இளைஞரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். இதில் அந்த இளைஞர் படுகாயமடைந்து மயக்க நிலைக்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் அவர்கள் விரைந்து வந்தனர்.
அங்கு அந்த இளைஞரை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இளைஞர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து இதனை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், அந்த இளைஞர் முஸ்தபாபாத்ஹில் வசிக்கும் பர்வேஸ் சைஃபி என்றும், அவர் தான் 1 வருடமாக காதலித்து வரும் 15 வயது சிறுமியை சந்திக்க வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three peoples kill youth for came to see girl friend in uttar pradesh