உத்தரகாண்ட் || நிலச்சரிவால் கங்கையில் விழுந்த வாகனம் - 3 பேர் பலி; 5 பேர் காயம்.!! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட் || நிலச்சரிவால் கங்கையில் விழுந்த வாகனம் - 3 பேர் பலி; 5 பேர் காயம்.!!

உத்தராகண்ட் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் நிலச்சரிவும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், இன்று தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் வாகனம் ஒன்று சிக்கி கங்கை நதிக்குள் விழுந்தது. அந்த வாகனத்தில் பதினொன்று பேர் பயணம் செய்துள்ளனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்தும் 5 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர். மேலும் 3 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி அவர்கள் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ரிஷிகேஷில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 

அதன் பின்னர் உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து விபத்தில் காணாமல் போன 3 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது:- 

"தற்போது மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் நடைபெற்று வருகிறது. காவல் துறையுடன் மாநில பேரிடர் மீட்புப்படை பணியாளர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரைக்கும் ஆற்றில் இருந்து மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. வாகனத்தில் இருந்த மற்ற பயணிகளைத் தேட டைவர்ஸ் குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்" என்றுத் தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples died and five peoples injured for landslide in uttarkant


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->