கனமழையால் 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை!
three days school leave for heavy rain
பீகார் மாநிலத்தில் தற்போது கன மழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில், தலைநகர் பாட்னாவில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் ஓடியது. இதன் காரணமாக நாளந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்பட பல மருத்துவமனைகளில் தண்ணீர் புகுந்ததால் அங்கிருந்த நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், பீகாரின் பாகல்பூர் என்ற இடத்தில மழையால் சேதமடைந்த வீட்டின் சுவர் இடிந்த விழுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், காகல் பகுதியில் சென்று கொண்டு இருந்த ஆட்டோ மீது மரம் விழுந்ததால் அந்த விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர்.
கடந்த மூன்று நாட்களில் மழையால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மீட்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில், கனமழையின் காரணமாக அங்குள்ள பள்ளிகளுக்கு வரும் செவ்வாய்க்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
English Summary
three days school leave for heavy rain