என்ன அன்கிள்னு சொல்லுவியா.. இளம்பெண்ணை தாக்கிய கடைகாரர்..! - Seithipunal
Seithipunal


அன்கிள் என்று அழைத்தற்காக 18 வயது பெண்ணை கொடூரமாக தாக்கி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வயதில் மூத்தோரை அன்கிள் என மரியாதையாக அழைக்கும் பழக்கம் தற்போது பலரிடம் உள்ளது. இப்படி இருக்கையில் அன்கிள் என்று அழைத்தற்காக இளம்பெண் ஒருவர் தாக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம், உத்தம் சிங்  பகுதியை சேர்ந்தவர் மோகித் குமார் (35). இவர் அந்த பகுதியில் விளையாட்டு பொருள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கடையில் கடந்த 19ம் தேதி நிஷா என்ற 18 வயது பெண் வந்துள்ளார்.

அந்த கடையில் இருந்து பேட்மிட்டன் ராக்கெட் வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று பார்த்த போது தான் அந்த ராக்கெட் உடைந்திருப்பதை கண்டு மாற்ற மறுநாள் அந்த கடைக்கு சென்றுள்ளார்

அப்போது அந்த பெண் அவரை அன்கிள் என்று அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அவர் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் கிடந்த அந்த பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோகித் குமாரை கைது செய்தனர். அந்த பெண்ணுக்கு ஆக்சிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the shopkeeper who attacked the girl


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->