உ.பி: 2 வருடமாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம் மாநிலத்தில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை இரண்டு வருடமாக பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சுல்தான்பூரில் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் வாலிபர், சிறுமி ஒருவரிடம் பழகி வந்துள்ளார். பின்பு அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, கடந்த இரண்டு வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இதனால் உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதில் என்னிடம் அந்த நபர், தனது மனைவி என்று அழைத்ததாகவும் இரண்டு வருடங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The man arrested for sexually assaulted the girl for two years in uttar pradesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->