500 படங்கள், 200 சிறுமிகள்.. சாயப்பட்டறை மேலாளரின் முகநூல் சேட்டை.. பதறிப்போன காவல்துறை.!
Thanjavur Culprit Arrest by Police Sexual Torture 200 Woman 28 April 2021
ஆன்லைன் வகுப்பிற்காக சிறுமிக்கு பெற்றோர் வாங்கிக்கொடுத்த அலைபேசியால் ஏற்பட்டுள்ள பரிதாபம் தொடர்பான பதைபதைப்பு சம்பவம் தெரியவந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த பெற்றோர், தனது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மகளுக்கு ஆண்ட்ராய்டு போன் வாங்கி கொடுத்துள்ளனர். படிப்பில் கெட்டிக்காரத்தனமாக இருந்த அந்தச் சிறுமி இருந்து வந்த நிலையில், எந்த சமயத்திலும் அலைபேசியில் மும்மரமாக இருந்துள்ளார்.
தங்களது மகள் இரவு பகலாக ஆன்லைன் வகுப்பில் நன்றாகப் படிக்கிறாள் என்று பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்து இருந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னதாக நள்ளிரவில் தாயார் கண்விழித்து பார்க்கையில் பக்கத்து அறையில் மகள் ஆடைகளின்றி அலைபேசி முன்னர் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து விசாரிக்கையில், முகநூலில் பிளாக்மெயில் நபரிடம் சிக்கிய சம்பவம் தெரியவந்துள்ளது. மேலும், இணையதள வகுப்புக்காக ஆண்ட்ராய்டு போனை வாங்கி முகநூல் பயன்படுத்த தொடங்கிய நிலையில், சேலம் என்ற முகவரியில் இருந்த இளைஞருக்கு நட்பு அழைப்பு விடுத்துள்ளார். அவரும், இந்த நட்பை ஏற்றுக்கொண்ட நிலையில், இருவரும் சாதாரணமாக பழகி வந்துள்ளனர்.
பின்னர், நாளடைவில் காமுகன் சிறுமியை காதலிப்பதாக கூறிய நிலையில், சிறுமியுடன் பாலியல் ரீதியாகவும் பேச ஆரம்பித்து இருக்கிறான். சிறுமிக்கும் அவனது பேச்சுகள் நாளடைவில் கவரும் வகையில் இருந்துள்ளது. இந்நிலையில், இளைஞரின் காமுக வார்த்தையால் மூளைச்சலவை செய்யப்பட்ட சிறுமி, இளைஞரை நம்பி நிர்வாண போட்டோ மற்றும் வீடியோவை அனுப்பிய நிலையில், அந்த இளைஞரும் தனது அந்தரங்க வீடியோவை அனுப்பியுள்ளான்.
இந்த விஷயம் சில மாதங்களாக தொடர்ந்து வந்த நிலையில், ஒரே நாளில் பலமுறை ஆபாசமான வீடியோ கால் பேச கூறி சிறுமியை காமுகன் வற்புறுத்தியுள்ளான். சிறுமியால் அது இயலாமல் போன நிலையில், உனது வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி இருக்கிறான். இதனால் பயந்து போன சிறுமி பெற்றோர்களுக்கு தெரியாமல் நிர்வாணமாக லைவ் சாட் செய்துள்ளார். இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட தாய், தனது மகளைப் போன்று வேறு யாரும் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணத்தில் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு முத்தியால்பேட்டை காவல்துறையினருக்கு புகார் வழங்கவே, சிறுமி கூறிய ஃபேஸ்புக் முகவரியில் இருந்த இளைஞரை பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில், அவருக்கும் - சிறுமிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதியான நிலையில், பேக் ஐடி மூலமாக இந்த விஷயம் நடந்துள்ளது அம்பலமானது.
இதையடுத்து, சைபர் கிரைம் காவல்துறையினரின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த எம்.ஏ எம்.பில் மற்றும் பி.எட் படித்த பட்டதாரியான கமலக்கண்ணன் என்பவனை கைது செய்தனர். மேலும், இவனுக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை உள்ள நிலையில், திருப்பூரில் இருக்கும் சாயப்பட்டறை மேலாளராகவும் பணியாற்றி வந்துள்ளான்.
இவன் போலியான முகநூல் மூலமாக பெண்களை ஏமாற்றி பாலியல் ரீதியாக சாட்டிங் செய்து, காதலிப்பது போல நடித்து ஆபாச வீடியோக்களை வாங்கி வைத்து மிரட்டியது அம்பலமானது. மேலும், மொத்தமாக இவனிடம் இந்த சிறுமி மட்டுமல்லாது 200 க்கும் மேற்பட்ட பெண்கள் சிக்கியுள்ளதும், அதன் மூலமாக 500 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. கமலக் கண்ணனை கைது செய்த காவல்துறையினர், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Thanjavur Culprit Arrest by Police Sexual Torture 200 Woman 28 April 2021