12-வது மாடியில் இருந்து குதித்த 10-ம் வகுப்பு மாணவி - தீவிர விசாரணையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


12-வது மாடியில் இருந்து குதித்த 10-ம் வகுப்பு மாணவி - தீவிர விசாரணையில் போலீசார்.!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருடைய மகள் ஜெசிகா. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், ஜெசிகா நேற்று வீட்டில் தனியாக இருந்தப்போது குடியிருப்பின் 12-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் படி போலீஸார் விரைந்து வந்து ஜெசிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், மாணவி ஜெசிகா கடந்த 3 மாதங்களில் 6 நாட்கள் மட்டுமே பள்ளிக்கு சென்றதும், இது குறித்து பள்ளி நிர்வாகம் ஜெசிகா பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளதும் தெரிய வந்தது.

இதனால், தான் ஜெசிகா தற்கொலை செய்துகொண்டாரா? இல்லை வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tenth class student sucide in banglore


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->