ஆளில்லாத வீட்டில் புகுந்த காதலன்.. திடீரென திரும்பி வந்த தந்தை.. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தின் நல்கொண்டா பகுதியில், தன்னுடைய மகளை சந்திக்க மகளின் ஆண் நண்பரை அப்பெண்ணின் தந்தை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சி இருக்கின்றது.

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள குர்ரம்போடு மண்டலத்தில் உள்ள கொப்போல் எனும் கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை இந்த கொடூர சம்பவமானது நடந்தேறியுள்ளது. ஏற்கனவே, சந்தோஷ் எனும் இளைஞர், அவுலா மல்லையா - ராமுலம்மா தம்பதியின் மகளை காதலித்து வந்துள்ளார். 

சம்பவத்தன்று சந்தோஷ் தன் காதலியான அந்த பெண்ணை சந்திக்க அவருடைய பெற்றோர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து சென்றுள்ளார். திடீரென வீட்டுக்கு திரும்பி வந்த அப்பெண்ணின் பெற்றோர் சந்தோஷை கண்டு மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகினார்கள். 

இதனை தொடர்ந்து, ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் தந்தை அவுலா மல்லையா சந்தோஷை கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் சந்தோஷ் திக்குமுக்காடி உயிரிழந்துள்ளார். இதுபற்றி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telungana Father Killed Daughters boy friend


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->