பள்ளிப்பாடம் நடத்தாமல் பலாத்காரம் செய்த ஆசிரியர்.! ட்ரெஸை கழட்டி செருப்பால் அடித்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் தெலுங்கானாவில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஊர் பொதுமக்கள் அடித்து உதைத்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. 

தெலுங்கானா மாநிலத்தில் கர்நூல் மாவட்டத்தில் சரத் என்பவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளியில் வேலைக்கு ஆசிரியராக சேர்ந்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஐந்தாம் வகுப்பு மாணவிகளுக்கு தான் டியூஷன் எடுப்பதாக கூறி இருக்கின்றார். 

இதனால், அக்கம் பக்கத்தில் இருந்த ஐந்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் பலரும் அவரிடம் டியூஷன் படிக்க சேர்ந்துள்ளனர். வீட்டில் படிக்க வந்த சிறுமிகளை தனியாக அழைத்துச் சென்று மது போதையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்து இருக்கின்றார். 

பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் தன்னுடைய பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெற்றோர்கள் மாணவிகளை அழைத்துக் கொண்டு பள்ளி தலைமை ஆசிரியரிடம் முறையிட்டு இருக்கின்றனர். பின்னர் தேர்வு எழுத சென்ற சரத்தை தேடி கண்டுபிடித்து சட்டையை கழட்டி செருப்பால் அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TEACHER RAPE 5 TH STD GIRL IN TELUNGANA


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->