மரபை உடைத்தெறிந்து தமிழிசை தடாலடி... தெலுங்கானாவில் குவியும் பாராட்டு..!
tamilisai soundarajan meets priyanka reddy family
"மரபை உடைத்து எறிந்த தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டுகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில் ஒரு பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் நடத்தப்பட்டு குற்றவாளிகள் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டார்கள்.
இதை தொடர்ந்து, அந்த மாநில கவர்னரான தமிழிசை கொலை செய்யப்பட்ட பெண் டாக்டர் வீட்டுக்கு ஆறுதல் சொல்ல கிளம்பியிருக்கிறார். அதற்கு கவர்னர் அலுவலக அதிகாரிகள், கவர்னர் நேரடியாக போவது மரபு கிடையாது. எனவே, அந்த குடும்பத்தை, கவர்னர் மாளிகைக்கு அழைத்து ஆறுதல் சொல்லுங்கள் என்று ஆலோசனை செய்தார்கள்.
ஆனால், அதற்கு தமிழிசை, இதற்கெல்லாம் மரபு பார்க்க வேண்டிய அவசியமில்லை. துக்கத்தில் இருக்கிற அவர்களுக்கு நேரில் போய் ஆறுதல் சொல்வது தான்முறை என்று டாக்டர் வீட்டுக்கு போய் ஆறுதல் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள். இதற்காக தமிழிசைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.",
English Summary
tamilisai soundarajan meets priyanka reddy family