கோடை கால சிறப்பு ரயில்: திருவனந்தபுரம்-சென்னை இடையே இயக்கம்.!
Summer special train between Thiruvananthapuram Chenna
கோடை காலத்தில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து சேலம் வழியாக சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதன்படி, வண்டி எண் 06044 திருவனந்தபுரம்-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், திருவனந்தபுரத்தில் இருந்து வருகின்ற மே மாதம் 3, 10, 17, 24, 31, ஆகிய தேதிகளிலும், ஜூன் மாதம் 7, 14, 21, 28 (புதன்கிழமைகளில்) இரவு 7.40 மணிக்குப் புறப்பட்டு மதியம் 12.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
இதேபோல், வண்டி எண் 06043 சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் அதிவிரைவு சிறப்புக் கட்டண சிறப்பு ரயில், மே மாதம் 4, 11, 18, 25, ஆகிய தேதிகளிலும், ஜூன் மாதம் 1, 8, 15, 22 மற்றும் 29 (வியாழன் கிழமைகளில்) ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.25 மணிக்குப் புறப்பட்டு திருவனந்தபுரத்தை காலை 6.45 மணிக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Summer special train between Thiruvananthapuram Chenna