திடீரென பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் ரெயில்: பதறிப்போன பயணிகள்!  - Seithipunal
Seithipunal


பஞ்சாப் பிரோஸ்பூர் மற்றும் மத்திய பிரதேசம் சியோனி இடையே படல்கோட் எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இந்த எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை ஆக்ரா ரயில் நிலையத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தது. 

அப்போது ரயிலின் ஒரு பெட்டியில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ரயில் ஓட்டுனர் உடனடியாக ரயிலை நிறுத்தி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரையும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். 

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னர் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த பெட்டியை ரயிலில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டு ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ பிடித்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென ஒரு பெட்டியில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பயணிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

suddenly Express train caught fire


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->