ஜார்கண்டில் சோகம் : பொட்டு வைத்ததால் வந்த வினை - மாணவி தற்கொலை.!! - Seithipunal
Seithipunal


ஜார்கண்டில் சோகம் : பொட்டு வைத்ததால் வந்த வினை - மாணவி தற்கொலை.!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் நகர் அனுமன்கார்ஹி பகுதியில் செயின்ட் சேவியர் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த உஷா குமாரி என்ற மாணவி நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளார். இதைப்பார்த்து பள்ளியின் ஆசிரியை சிந்து அந்த மாணவியை அடித்து வகுப்பு முடியும் வரை அவமதிப்பு செய்து உள்ளார். 

இதனால் மன வருத்தத்தில் இருந்த மாணவி உஷா குமாரி கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவி எழுதி வைத்த கடிதத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

அதன் படி போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தன்பாத் நகர குழந்தைகள் நல கமிட்டியின் தலைவர் உத்தம் முகர்ஜி தெரிவித்ததாவது, "இது ஒரு தீவிர விவகாரம். அந்த பள்ளி சி.பி.எஸ்.இ. வாரியத்துடன் இணைக்கப்படவில்லை. மாவட்ட கல்வி அதிகாரியிடம் நான் விவரங்களை கூறி விட்டேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளேன். 

இந்த சம்பவத்தில் முதல்வர் ராஜ்கிஷோர் சிங் மற்றும் சிந்துஜா ஆகியோரை போலீசார் கைது செய்து உள்ளனர். சம்பவம் நடந்த பின்பு, மாணவியின் பெற்றோர் மற்றும் உள்ளூர்வாசிகள், பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக மாணவியின் உடலுடன் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுத்து உள்ளனர்" என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

student sucide for teacher insulted thilak on forhead in jarkant


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->