மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலைகளை உருவாக்குபவர்களாக திகழ வேண்டும்! குடியரசு தலைவர்.!
Student must be job givers not job seekers
மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை களை உருவாக்க களாகத் திகழ வேண்டும் என்று குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் இந்திய மேலாண்மை கழகம் (ஐஐஎம்) நிரந்தர வளாகத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் திறந்துவைத்தார்.
அப்போது அவர், பாட திட்டத்தின் நோக்கம் லட்சியம் நமக்குள் சுய பரிசோதனை செய்து அதன் மூலம் நமது கனவுகளை நனவாக்க சந்தர்ப்பத்தை வழங்குவதாக இருக்க வேண்டும். புதுமை மற்றும் தொழில்முனைவு இரண்டும் தொழில்நுட்பத்தின் மூலம் நம் வாழ்க்கையை எளிதாக்குவதோடு மட்டுமல்லாமல் பலருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குகிறது என்று கூறினார்.
கல்வி நிலையங்கள் வெறும் கற்கும் இடங்கள் மட்டுமல்ல ஒவ்வொரு மாணவரிடம் மறைந்திருக்கும் அனைத்து திறமைகளை வெளிக்கொண்டு வரும் இடம் என்றும், மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலைகளை உருவாக்குபவற்களாக திகழ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இத்தகைய மாணவர்களை நாக்பூர் ஐஐஎம் உருவாக்கும் நம்பிக்கை என்று குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Student must be job givers not job seekers