பாம்பு, குரங்கு, ஆமை | சென்னை விமான நிலையத்தை பதறவைத்த பயணி.!
Snake Monkey Tortoise The passenger panicked the Chennai airport
சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட பாம்பு, குரங்கு, ஆமைகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்திற்கு வந்த பேங்காக் விமானத்தில், சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட பாம்புகள், குரங்கு, ஆமைகள் ஆகியவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
பேங்காக்கிலிருந்து வந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் சட்டவிரோதமாக விலங்குகளை கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய நபரை அடையாளம் கண்டு சோதனை நடத்தினர்.
அவரிடம் ஒரு குரங்கு, 15 அரிய வகை பாம்புகள், 5 மலைப்பாம்புகள், 2 ஆமைகள் கடத்தி வந்தது தெரியவந்தது.
அவற்றை உடனடியாக பறிமுதல் செய்த அதிகாரிகள், பேங்காக்கிற்கே திருப்பி அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Snake Monkey Tortoise The passenger panicked the Chennai airport